நாடளாவியரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தனியார்பேருந்து சேவை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று சுமார் ஆயிரம் தனியார் பேருந்துகள் மாத்திரமே நாடளாவியரீதியில் சேவையில் ஈடுபடும் என கெமுனுவிஜயரட்ண தெரிவித்துள்ளார்.
நாளை இதனை விட குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகளை உரிமையாளர்கள் சேவையில் ஈடுபடுத்துவார்கள் எனவும் தெரிவித்து;ள்ள அவர்மக்கள் சொந்தவாகனங்களை விட்டுவிட்டு பேருந்துசேவையை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முச்சக்கரவண்டிசேவை முற்றாக சீர்குலைந்துள்ளது,நோயாளிகள் மருத்துவமனைகளிற்கு செல்வதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் போதியளவு எரிபொருளை வழங்கமுடியாத நிலையுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.